Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 10, Verse 32

ஸர்கா3ணாமாதி3ரன்த1ஶ்ச1 மத்4யம் சை1வாஹமர்ஜுன |

அத்4யாத்1மவித்3யா வித்3யானாம் வாத3ஹ ப்1ரவத3தா1மஹம் ||32||

ஸர்கானாம்—--அனைத்து படைப்புகளின்; ஆதிஹி---ஆரம்பம்; அந்தஹ--—முடிவு; ச--—மற்றும்; மத்யம்—நடுவு; ச—--மற்றும்; ஏவ—--உண்மையில்; அஹம்—--நான்; அர்ஜுன—-அர்ஜுனன்; அத்யாத்ம-வித்யா---ஆன்மிகத்தின் அறிவியல்; வித்யானாம்—--விஞ்ஞானங்களில்; வாதஹ---தர்க்கரீதியான முடிவு; ப்ரவததாம்—--விவாதங்களின்; அஹம்----நான்

Translation

BG 10.32: அர்ஜுனா, நான் அனைத்து படைப்புகளின் ஆரம்பம், நடுவு, மற்றும் முடிவு என்று அறிந்து கொள். விஞ்ஞானங்களில், நான் ஆன்மீகத்தின் விஞ்ஞானம், மற்றும் விவாதங்களில், நான் தர்க்கரீதியான முடிவு.

Commentary

இருபதாம் வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்து உயிரினங்களின் ஆரம்பத்திலும் நடுவிலும் முடிவிலும் அவர் இருப்பதாக கூறினார். இப்பொழுது, ​​அவர் அனைத்து படைப்புகளுக்கும் இதையே கூறுகிறார்: விண்வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி என படைக்கப்பட்ட அனைத்தும் ஸர்க3 எனப்படும். நான் இவற்றைப் படைத்தவன் (ஆதி3), பராமரிப்பவன் (மத்3ய), கலைப்பவன் (அன்த1). எனவே, உருவாக்கம், பராமரித்தல் மற்றும் கலைத்தல் ஆகிய செயல்முறைகளை எனது மகிமைகளாக தியானிக்க முடியும்.

வித்யா என்பது அறிவின் பாடங்கள் தொடர்பாக ஒருவர் பெறும் கல்வியாகும். பதினெட்டு வகையான அறிவியல்களை வேதங்கள் விவரிக்கின்றன. அவற்றில், பதினான்கு முக்கியமானவை:

அங்கா3நி வேதா3ஶ்ச1த்1வாரோ மீமான்ஸா நியாய விஸ்த1ரஹ

பு1ராணம் த4ர்மஶாஸ்த்1ரம் ச1 வித்4யா ஹ்யேதா1ஶ்ச1து1ர்த3ஶஹ

ஆயுர்வேதோ34னுர்வேதோ3 கா4ந்த4ர்வஶ்சை1வ தே1 த்1ரயஹ

அர்த2ஶாஸ்த்1ரம் ச1து1ர்த்12ம் து1 வித்4யா ஹ்யஷ்டாத3ஶைவ த1

(விஷ்ணு பு1ராணம் 3.6.27–28)

‘ஶிக்ஷா, க1ல்ப், வ்யாகர1ன், நிருக்1தி1, ஜோதி1ஷ், ச2ந்த—இவை வேதா4ங்க3ம் (வேதங்களின் உறுப்புகள்) எனப்படும் ஆறு வகையான அறிவு . ரிக்3, யஜுர், ஸாமம், அத2ர்வம் - இவை வேத அறிவின் நான்கு கிளைகள். மீம்மான்ஸம், நியாயம், தர்ம சாஸ்திரம் மற்றும் புராணங்களுடன், இவை பதினான்கு முக்கிய அறிவியல்களை உள்ளடக்கியது.’ இந்த அறிவியல்களின் பயிற்சி அறிவுத்திறனை வளர்க்கிறது, அறிவை ஆழப்படுத்துகிறது மற்றும் தர்மத்தின் பாதையின் விழிப்புணர்வை அதிகரிக்கிறது. மேற்கூறிய நன்மைகளுக்கு மேலதிகமாக, ஆன்மீக விஞ்ஞானம் மனிதர்களை பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, மரணமில்லாமையை வழங்குகிறது. இதன் விளைவாக, இது முன்னர் குறிப்பிடப்பட்ட அறிவின் பாடங்கள் விட உயர்ந்தது. இது ஸ்ரீமத் பாகவதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது: ஸா வித்4யா த1ன்மதி1ர்யயா (வசனம் 4.29.49) 'புத்தியை கடவுளின் தாமரைப் பாதங்களில் இணைப்பதன் மூலம் பெறும் அறிவே சிறந்த அறிவு.'

வாத3ம் மற்றும் தர்க்கத் துறையில், ஜல்ப1 என்பது ஒருவரின் கருத்தை நிலைநிறுத்துவதற்காக எதிராளியின் அறிக்கைகளில் தவறுகளைக் கண்டறிவதைக் குறிக்கிறது. வித1ண்ட4ம் என்றால் ஏய்ப்பு மற்றும் அற்பமான வாதங்கள் மூலம் உண்மையைப் பற்றிய சரியான விவாதத்தைத் தவிர்ப்பது. வாதம் என்பது விவாதத்தின் தர்க்கரீதியான முடிவு. தர்க்கம் என்பது யோசனைகளின் தொடர்பு மற்றும் உண்மையை நிறுவுவதற்கான அடிப்படையாகும். எனவே தர்க்கத்தைப் பற்றிய உலகளாவிய புரிதலின் மூலம் அறிவை மனித சமுதாயத்தில் எளிதாகக் கற்கவும், கற்பிக்கவும் மற்றும் வளர்க்கவும் முடியும். தர்க்கத்தின் உலகளாவிய கோட்பாடு கடவுளின் ஆளுமைகளின் வெளிப்பாடு ஆகும்

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
10. விபூதி யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!